Monday, May 19, 2008

முதலாவதாய்!


எங்கோ ஒரு மனதில்
ஏதோ ஒரு ஞாபகத்தில்
என் நினைவு தோன்றும்
முதலாவதாய்....

எங்கோ ஒரு தோழி வீட்டில்
ஏதோ ஒரு மூலையில்
நான் கொடுத்த பரிசு நிற்கும்
முதலாவதாய்...

எங்கோ ஒரு வானில்
ஏதோ ஒரு துளியை
மேகம் என் மேல் சிந்தும்
முதலாவதாய்...

எங்கோ ஒரு கரையில்
ஏதோ ஒரு மண்ணில்
என் பாதச்சுவடை
அலை தொட்டுச் செல்லும்
முதலாவதாய்...

எங்கோ ஒரு நாட்குறிப்பில்
ஏதோ ஒரு கையும்
என் பெயரை எழுதும்
முதலாவதாய்....





No comments:

Post a Comment

feel free to tell what you want!