Friday, December 12, 2008

தெளிவு

தூங்கா விழிகள்
ஓயா உள்ளம்
வலியா உடல்
ஒரு கனவு !


கரைத் தெரியாப் பயணம்
தொலை தூர வெளிச்சம்
கலங்கரை விளக்கம்
ஒரு தேடல் !


நீண்ட காத்திருப்பு
உடையா மௌனம்
பொருள் புரியாப் பார்வை
ஒரு காதல் !


சிலிர்க்கும் புன்னகை
நிலைக்கும் நெருக்கம்
துளிர்க்கும் கண்ணீர்
ஒரு வாழ்க்கை !


இவை
ஒரு நீ !

இவற்றிற்கும் மேல்
ஒரு நான் !

3 comments:

  1. \\நீண்ட காத்திருப்பு
    உடையா மௌனம்
    பொருள் புரியாப் பார்வை
    ஒரு காதல் !\\

    அருமை

    ReplyDelete
  2. //நீண்ட காத்திருப்பு
    உடையா மௌனம்
    பொருள் புரியாப் பார்வை
    ஒரு காதல் !//

    காதலுக்கு புது விளக்கம் அருமை...

    ReplyDelete
  3. @ ஜமால்,புதியவன் :

    நன்றி !!

    ReplyDelete

feel free to tell what you want!